விலங்குகளைப் பராமரிப்பது ஒரு சமூக பொறுப்பு
நாய்களுக்காகத் தீவைக் கடக்கும் சகோதரிகள்
வீட்டில் பூனைகளையும், வெளியே நாய்களையும் வளர்க்கின்றனர் சகோதரிகள் சபிதா, ஷனிதா கரப்பன்.
பாசிர் ரிஸ்ஸிலிருந்து சுங்கை தெங்காவில் இருக்கும் ‘எஸ்ஓஎஸ்டி’ நாய்க் காப்பகத்திற்கு 2016லிருந்து வாரந்தோறும் அவர்கள் இரண்டு மணி நேரப் பயணம் செய்துவந்துள்ளனர். அதற்கான வெகுமதி, செல்ல நாய்களின் அன்பு முத்தங்களும் வாலாட்டுதலும்.